தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிடுக கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்




ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பிரதி மாதம் 7ம்தேதிக்குள் சம்பளம் வழங்குவதை உத்திரவாதப்படுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும், சட்ட சலுகைகளை அமல்படுத்தாமலும் அலட்சியம் காட்டி வரும் சென்னை இன்னோவெட்டி நிறுவத்திற்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது.
இஎஸ்ஐ., பிஎப் ஆகியவற்றை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறைபடுத்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு மையங்களில் வியாழனன்று கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளபிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. சந்திரசேகரன், ஒப்பந்தஊழியர் சங்கத்தின் மாவட்டதுணைத் தலைவர் எம்.பி. வடிவேல் ஆகியோர்தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல்ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் என்.பி.ராஜேந்திரன், எம். மதனகோபால், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் பழனிசாமி, விஜயன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக